×

குழாய் புனரமைப்பு பணியால் நகராட்சி மக்களுக்கு லாரிகளில் குடிநீர்

புதுக்கோட்டை, மே 6: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான மெயின் குழாய்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுசமயம் குடிநீர் விநியோகம் சில சமயங்களில் தடைபட்டு வருகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. மாற்று ஏற்படாக இந்நகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி லாரிகள் மற்றும் நகராட்சி ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post குழாய் புனரமைப்பு பணியால் நகராட்சி மக்களுக்கு லாரிகளில் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tamil Nadu Drinking Water and Drainage Board ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!